தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு

திருவோணம் அருகே தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
Published on

திருவோணத்தை அடுத்துள்ள வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கொல்லைக்காடு மில்லுதெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் கருப்பையன் (வயது36). கூலித்தொழிலாளி. இவருக்கு கலாவதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கருப்பையன் கடந்த மாதம் 28-ந்தேதி தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இவரை பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 2-ந்தேதி கருப்பையன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கலாவதி கொடுத்த புகாரின் பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com