வாகனம் மோதி தொழிலாளி பலி

வடமதுரை அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.
வாகனம் மோதி தொழிலாளி பலி
Published on

வடமதுரை அருகே உள்ள புத்தூர் கோட்டைக்கல்பட்டியை சேர்ந்தவர் தனபால் (வயது 25). இவருடைய தம்பி சிவா என்ற கருப்பசாமி (23). தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இந்தநிலையில் நேற்று முன்தினம் கருப்பசாமி மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். செங்குறிச்சியில் இருந்து ஆலம்பட்டி செல்லும் சாலையில் அவர் வந்தபோது, அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த கருப்பசாமி தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதற்கிடையே அந்த வழியாக தனபால் தனது நண்பரான நம்பியார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது படுகாயங்களுடன் கருப்பசாமி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே தனபால், தனது தம்பியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கருப்பசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தனபால் கொடுத்த புகாரின்பேரில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com