இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி:மெக்கானிக் உள்பட 5 பேர் மீது வழக்கு

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக மெக்கானிக் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி:மெக்கானிக் உள்பட 5 பேர் மீது வழக்கு
Published on

பெண் ஏமாற்றம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சின்னமலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் மணிவேல். இவர் தனியார் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவர் 24 வயது பெண் ஒருவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பலமுறை உறவு வைத்து கொண்டுள்ளார். இந்தநிலையில் மணிவேல் அந்தப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல், அவரது உறவினர் மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணம் செய்ய மறுப்பு

இதுகுறித்த தகவல் அந்த பெண்ணிற்கு தெரியவரவே மணிவேல் வீட்டிற்கு அந்த பெண் சம்பவத்தன்று சென்றுள்ளார். அங்கு மணிவேல் இல்லையாம். ஆனால் அந்த வீட்டிலில் இருந்த மணிவேலின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாயார் அஞ்சலி, உறவினரான ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் ஆகிய 4 பேரும் அந்தப் பெண்ணை சாதி பெயர் சொல்லி திட்டியுள்ளனர். இதுகுறித்து அந்த பெண் அவரது பெற்றோர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் மணிவேல் வீட்டாரிடம் கேட்டபோது அந்த பெண்ணை திருமணம் செய்ய முடியாத என மணிவேல் வீட்டார் தெரிவித்துள்ளனர்.

5 பேர் மீது வழக்கு

இதனால் மனமடைந்த அந்தப் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த அப்பெண்ணின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். .இதுதொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், மணிவேல் உள்பட 5 பேர் மீது குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் பெண்ணை பலவந்தமாக கற்பழித்தது மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com