இளம்பெண்ணை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீச்சு

வேப்பனப்பள்ளி அருகே ஆந்திர மாநில எல்லையில் இளம்பெண்ணை கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டி ஏரியில் மர்ம நபர்கள் வீசி சென்றனர். அவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இளம்பெண்ணை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீச்சு
Published on

வேப்பனப்பள்ளி

வேப்பனப்பள்ளி அருகே ஆந்திர மாநில எல்லையில் இளம்பெண்ணை கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டி ஏரியில் மர்ம நபர்கள் வீசி சென்றனர். அவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏரியில் துர்நாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே ஆந்திர மாநில எல்லையானஓ.என்.கொத்தூர் கிராமம் உள்ளது. இங்குள்ள ஏரியில் நேற்று துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த வழியாக வந்த பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தனர். அப்போது ஏரிக்கரையில் மூட்டை ஒன்று கிடந்தது.

இதுகுறித்து அவர்கள் குடிப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரை அடித்துக்கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஏரிக்கரையில் வீசி சென்றது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

கொலை செய்யப்பட்ட பெண் சுடிதார் அணிந்த நிலையில் இருந்தார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. உடலில் கழுத்து உள்பட பல இடங்களில் காயங்கள் இருந்தன.இதைத் தொடர்ந்து போலீசார் அந்த உடலை மீட்டு குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வேப்பனப்பள்ளி அருகே மாநில எல்லையில் உடல் கிடந்ததால் சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யாரேனும் இளம்பெண்கள் காணாமல் போய் உள்ளார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் காணாமல் போன இளம்பெண்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.மேலும் அந்த இளம்பெண்ணை கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டி ஏரியில் வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வேப்பனப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com