கொலை முயற்சி வழக்குகுண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

கொலை முயற்சி வழக்கு குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டா.
கொலை முயற்சி வழக்குகுண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
Published on

திண்டிவனம் தாலுகா ஈச்சேரி கிராம குளக்கரை தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் ஜெயக்குமார் என்கிற சேட்டு (வயது 35). இவர் மீது ரோஷணை போலீஸ் நிலையத்தில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 19.7.2023 அன்று சலவாதி கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடை எதிரே சாரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவரை முன்விரோதம் காரணமாக ஜெயக்குமார் கத்தியால் வெட்ட முயன்றார்.

இதுதொடர்பாக ஜெயக்குமார் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஜெயக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com