போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

புளியரை அருகே போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
Published on

செங்கோட்டை:

புளியரை அருகே கீழப்புதூர் சத்துணவுக்கூட தெருவைச் சேர்ந்த முருகன் மகன் சுபாஷ் (வயது 24). இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்தநிலையில் அவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர், புளியரை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் தென்காசி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினா. பின்னர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுபாஷை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com