அரசு பஸ் டிரைவர் மீது வாலிபர் தாக்குதல்

அரசு பஸ் டிரைவர் மீது வாலிபர் தாக்குதல் நடத்தினர்.
அரசு பஸ் டிரைவர் மீது வாலிபர் தாக்குதல்
Published on

புதுக்கோட்டையில் இருந்து கடம்பராயன்பட்டி நோக்கி நேற்று முன்தினம் சென்ற அரசு டவுன் பஸ்சில் படிக்கட்டில் பயணம் செய்தபடி வாலிபர் ஒருவர் சென்றார். அப்போது பஸ்சை நடுரோட்டில் நிறுத்திவிட்டு டிரைவர், அந்த வாலிபரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், டிரைவரை தாக்கிவிட்டு தப்பியோடினார். இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தாக்கப்பட்ட டிரைவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com