

சென்னை,
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
*தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 75,064 வாக்குச்சாவடிகளில், 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன; 62 இடங்களில் வாக்குகள் எண்ணப்படும்.
*தமிழ்நாட்டில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு ஆகியுள்ளன.
*தமிழ்நாட்டில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள 5.73 கோடி பேரில், சுமார் 14.59 லட்சம் முதல் முறை வாக்காளர்கள்
* சுமார் 86,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்; 300 கம்பெனி துணை ராணுவம் தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளன
* தமிழ்நாட்டில் இதுவரை 1,262 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல்; ரொக்கமாக மட்டும் ரூ.543 கோடி கைப்பற்றப்பட்டது” இவ்வாறு அவர் கூறினார்.