புதுடெல்லி,
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து இருந்த 5 பயணிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய குடியேற்றத்துறை அதிகாரிகள் விசா விதிமுறைக்கு மாறாக செயல்பட்டதாக கூறி அவர்கள் 5 பேரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டனர்.
நாடாளுமன்ற மக்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த்ராய், இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.