திண்டுக்கல்,
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் காஞ்சி வீரன்ஸ் அணிகளுக்கு இடையேயான 19-வது லீக் ஆட்டம் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் 10 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அதன் பிறகு திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, கோவை கிங்ஸ் ஆகிய அணிகளை வரிசையாக புரட்டியெடுத்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 புள்ளிகளுடன் தற்போது 3வது இடத்தில் உள்ளது.
காஞ்சி வீரன்ஸ் அணியும் கில்லீஸ் போன்று முதல் ஆட்டத்தில் தோற்று அதன் பிறகு அடுத்த 3 ஆட்டங்களில் வெற்றியோடு எழுச்சி பெற்று 6 புள்ளிகளுடன் இருக்கிறது.
மொத்தத்தில் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் காஞ்சி வீரன்ஸ் அணியும் வலுவுடன் இருப்பதால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.