திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் மதுரை மாவட்ட செயலாளர் மகேந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் 4 கட்டமாக பிரசாரம் மேற்கொள்கிறார். அதன்படி அவர் இன்று (புதன்கிழமை) தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்.
இன்று மாலை 4 மணிக்கு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட ஐராவதநல்லூரில் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து விரகனூர், பெரிய ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரிக்கிறார். 2-ம் கட்டமாக நாளை மாலை 4 மணிக்கு அவனியாபுரம் பகுதி முழுவதும் பிரசாரம் செய்கிறார்.
பின்னர் வருகிற 9-ந்தேதி 3-ம் கட்டமாக திருப்பரங்குன்றம் தியாகராஜ காலனியில் டி.டி.வி.தினகரன் பிரசாரத்தை தொடங்கி, திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி, திருநகர், விளாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.
இதையடுத்து 4-ம் கட்டமாக வருகிற 16-ந்தேதி நாகமலைபுதுக்கோட்டை, கூத்தியார்குண்டு பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.பிரசாரம் மேற்கொள்ள டி.டி.வி.தினகரன் நேற்று மதுரைக்கு வந்தார்.