

புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சந்தேகத்துக்குரிய வகையில் வாகனங்களில் இடமாற்றம் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. இதுகுறித்து மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சந்தேகத்தை போக்க வேண்டியது தேர்தல் கமிஷனின் கடமை. அப்படி செய்தால்தான், தேர்தல் மீது மக்கள் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். கருத்து கணிப்பு என்பது இறுதி முடிவல்ல. இவ்வாறு அவர் கூறினார்.