புதுடெல்லி,
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல்காந்தி நேற்று வெளியிட்டார். அப்போது அவர், தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை அல்லது ஊழல் பற்றி விவாதிக்க தயாரா என பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் சவால் விடுகிறேன் என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய மந்திரி அருண் ஜெட்லி நேற்று டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, விவரம் தெரியாத மற்றும் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களுடன் விவாதிக்க நாங்கள் தயாராக இல்லை என கூறினார்.