அரபிக்கடலில் 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

தென்தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இந்நிலையில், அரபிக்கடலின் தென்கிழக்கு, மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிகள் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 9-ம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்தியவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கிழக்கு திசை காற்று தமிழகத்தில் உள்ளே செல்ல வாய்ப்பு என்பதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

X

Daily Thanthi
www.dailythanthi.com