வங்கக்கடலில் 24-ம் தேதி புயல் சின்னம் உருவாகிறது - வானிலை ஆய்வு மையம் தகவல்

புயல் சின்னம் படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
நாடு முழுவதும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருகிற 22-ம் தேதி வரை கனமழை பெய்ய இருப்பதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வங்காள தேசம், மேற்கு வங்காள கடற்கரை பகுதியில் வருகிற 24-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த புயல் சின்னம் படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story






