தமிழகத்தில் 5 இடங்களில் சதம் அடித்த வெயில்!

தமிழகத்தின் சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
வெயில்
Published on

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 5 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

வெயில் அளவு

  1. ஈரோடு – 100.04 டிகிரி பாரன்ஹீட்

  2. மதுரை விமான நிலையம் – 100.4 டிகிரி பாரன்ஹீட்

  3. நாகப்பட்டினம் – 100.2 டிகிரி பாரன்ஹீட்

  4. தஞ்சாவூர் – 100.4 டிகிரி பாரன்ஹீட்

  5. திருச்சி – 101.3 டிகிரி பாரன்ஹீட்

X

Daily Thanthi
www.dailythanthi.com