வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் காதுகளை அறுத்து நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

புதுவை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் காதுகளை அறுத்து நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Published on

புதுச்சேரி,

புதுவையை அடுத்த தமிழகப் பகுதியான நாவற்குளத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருடைய மனைவி கல்யாணி (வயது71). இவர்களுக்கு ஜோதிகுமார், சுரேஷ்குமார் என்ற மகன்கள் உள்ளனர். கடந்த ஆண்டு கோபாலகிருஷ்ணன் இறந்துவிட்டார்.

அதைத்தொடர்ந்து கல்யாணி அவருடைய இளையமகன் சுரேஷ்குமார் பராமரிப்பில் இருந்து வந்தார். சுரேஷ்குமாருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்

X

Daily Thanthi
www.dailythanthi.com