

கீவ்
ரஷியா மீது 600-க்கும் மேற்பட்ட டிரோன்களை வீசி உக்ரைன் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது.
ரஷியாவுடன் 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் தற்போது இதுவரை இல்லாத அளவில் வான் வழித்தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷியாவின் 12 மாகாணங்கள் மற்றும் கிரீமியா தீவை குறிவைத்து ஒரே இரவில் 660 டிரோன்களை வீசி உக்ரைன் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த அதிரடி தாக்குதலில் ரஷியாவின் போர்க்கப்பல்கள். ரேடார் நிலையங்கள் மற்றும் ஒரு முக்கிய ரசாயன ஆலை தீப்பற்றி எரிந்தன என தகவல்கள் வெளியாகியுள்ளன. “போரை முடிக்க ரஷியாவை கட்டாயப்படுத்தவே இந்த 40 நாள் அதிரடி திட்டம்" என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முழங்கினார். இந்த தாக்குதலால் ரஷியா நிலைகுலைந்துள்ளது.
எனினும், ரஷியாவும் பதிலடியில் ஈடுபட்டது. இதில் இரு தரப்பிலும் சேர்த்து மொத்தம் 3 பேர் பலியாகி உள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.