பாகிஸ்தானில் திருமண கோஷ்டி சென்ற வேன் மீது லாரி மோதி மணமகன் உள்பட 9 பேர் பலி

பாகிஸ்தானில் திருமண கோஷ்டி சென்ற வேன் மீது லாரி மோதி மணமகன் உள்பட 9 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானில் திருமண கோஷ்டி சென்ற வேன் மீது லாரி மோதி மணமகன் உள்பட 9 பேர் பலி
Published on

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் பாபர்லோய் பகுதியில் இருந்து ஒரு மினிவேன் புறப்பட்டது. அதில் திருமண விழாவுக்காக மணமகன் வீட்டார் சென்று கொண்டிருந்தனர். கோட்கியில் உள்ள சுக்கூர்-முல்தான் நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி எதிரே வேகமாக வந்த ஒரு லாரி மீது மோதியது.

இந்த கோர விபத்தில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்தனர். திருமணத்துக்கு சென்ற நிலையில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com