ஆப்பு வைக்கும் ஏஐ... 4,800 பேரை வீட்டுக்கு அனுப்பிய மைக்ரோசாப்ட்!

மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகளவில் சுமார் 4,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
Image Credits: AI
Image Credits: AI
Published on

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம், உலகளவில் சுமார் 4,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பணிநீக்கம், மைக்ரோசாப்டின் மொத்த உலகளாவிய பணியாளர்களில் சுமார் 2.1 சதவீதமாகும். நிறுவனத்தின் செயல்பாடுகளை மேலும் திறன்மிக்கதாக மாற்றுவதும், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தில் முதலீடுகளை அதிகரிப்பதும், நிர்வாக கட்டமைப்பை எளிமைப்படுத்துவதும் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, எக்ஸ்பாக்ஸ் (Xbox) கேமிங் பிரிவு மற்றும் வணிக விற்பனை (Commercial Sales) உள்ளிட்ட சில பிரிவுகளில் பணியாளர் குறைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நிறுவனத்தின் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

மேலும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவன விதிகளின்படி இழப்பீடு, மருத்துவ நலன்கள் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் மைக்ரோசாப்ட் உறுதியளித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com