உலகைச்சுற்றி...

இத்தாலியின் ரோம் நகரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.
உலகைச்சுற்றி...
Published on

* பாகிஸ்தானில் முந்தைய அரசில் உள்துறை மந்திரியாக இருந்த அசன் இக்பால் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொல்ல முயன்ற வழக்கில், மத அமைப்பு ஒன்றை சேர்ந்த 22 வயதான அபித் உசேனுக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து லாகூர் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

* இத்தாலியின் ரோம் நகரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.

* ஈராக் நாட்டின் கிர்குக் மாகாணத்தில் ரியாத் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய ஒரு தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

* ஆப்கானிஸ்தானில் லக்மான் மாகாணத்தில் 2 வாரங்களுக்கு முன்னர் 13 தொழிலாளர்களை தலீபான் பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர். இப்போது அவர் களை விடுவித்து விட்டனர்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com