கொரோனா தாக்குதல் எதிரொலி: பிரான்ஸ் நாட்டில் சுகாதார அவசரநிலை ஜூலை 24ம் தேதி வரை நீட்டிப்பு

கொரோனா தாக்குதல் எதிரொலியாக, பிரான்ஸ் நாட்டில் சுகாதார அவசரநிலையை ஜூலை 24ம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தாக்குதல் எதிரொலி: பிரான்ஸ் நாட்டில் சுகாதார அவசரநிலை ஜூலை 24ம் தேதி வரை நீட்டிப்பு
Published on

பாரிஸ்,

உலக அளவில் கொரோனா வைரஸ் தெற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 2,40,381 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் 210 நாடுகளில் மொத்தம் 34,24,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,93,766 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிரான்ஸ் நான்காவது இடத்தில் உள்ளது.

பிரான்சில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 1,67,346 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு பலியானோர் எண்ணிக்கை 24,594 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசின் தாக்குதலில் இருந்து இதுவரை 50,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு விதிக்கப்பட்ட சுகாதார அவசரநிலையை, ஜூலை 24ம் தேதி வரை ( இரண்டு மாதங்கள்) நீட்டிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com