செனகலில் எதிர்க்கட்சித் தலைவர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: 5 பேர் பலி

செனகல் நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் போது 5 பேர் பலியாகினர்.
செனகலில் எதிர்க்கட்சித் தலைவர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: 5 பேர் பலி
Published on

தக்கார்,

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் எதிர்க்கட்சித் தலைவர் உஸ்மானே சோன்கோவை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் தக்கார் உள்பட நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டத்தில் நேற்று முன்தினம் மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் 5 பேர் பலியாகினர்.

முன்னதாக தெற்கு செனகலில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன்மூகம் செனகல் போராட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தது.

ஒரு கற்பழிப்பு குற்றச்சாட்டின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் உஸ்மானே சோன்கோ கடந்த புதன்கிழமை அன்று கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டங்கள் அங்கு நடைபெற்று வருகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com