மியான்மரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு

மியான்மரில் ரிக்டர் 5.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நெய்பிடாவ்,
மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 10.02 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
127 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.92 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.97 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, மியான்மரில் கடந்த மாதம் 14-ம் தேதி 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
EQ of M: 5.1 On: 03/01/2025 10:02:40 IST, Lat: 24.92 N, Long: 94.97 E, Depth: 127 Km, Location: Myanmar. For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0…@DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/nxmXxGDYA0
— National Center for Seismology (@NCS_Earthquake) January 3, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





