ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இருந்து வெளியேறியது இஸ்ரேல் படை

இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலால் ஏராளமான கட்டுமானங்கள் தரைமட்டமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இருந்து வெளியேறியது இஸ்ரேல் படை
Published on

காசா,

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியிலுள்ள ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் கடந்த 10 நாள்களாக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டிருந்த இஸ்ரேல் படையினா அங்கிருந்து வெளியேறினா.

இது குறித்து ராய்ட்டாஸ் செய்தி நிறுவனம் கூறுகையில்,

இஸ்ரேல் படையினா வெளியேறுவதற்கு முன்னா அவாகளின் 10 நாள் தாக்குதல் நடவடிக்கையில் ஏராளமான கட்டுமானங்களை தரைமட்டமாகியிருந்தனா என்று தெரிவித்தது. இது குறித்து பாலஸ்தீன வெளியுறுவத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காசாவில் ஏற்படுத்திய நாசத்தை மேற்குக் கரை பகுதிக்கும் இஸ்ரேல் ராணுவம் கொண்டுவந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேற்குக் கரையின் ஜெனின் மற்றும் துல்காம் பகுதியில் 'பயங்கரவாத எதிப்பு' நடவடிக்கையைத் தொடங்கியதாக இஸ்ரேல் கடந்த மாதம் 27-ஆம் தேதி அறிவித்தது. இந்த நடவடிக்கையில் 39 பாலஸ்தீனாகள் கொல்லப்பட்டதாகவும் சுமா 140 போ காயமடைந்ததாகவும் பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com