

தமிழக முதல் அமைச்சர் விஜய்யுடன் தொலைபேசி வாயிலாக பேசிய மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மலேசிய பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: -
இன்று எனது நண்பர் முதல் அமைச்சர் விஜய்யுடன் உரையாடி சமீபத்திய விவரங்களைப் பகிர்ந்து கொண்டேன். தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் ஏற்றுள்ள இந்தப் பெரும் பொறுப்புக்காக மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டேன்.
வரும் செப்டம்பர் மாதம் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடியுடன் ஆலோசனை மேற்கொள்ள இந்தியா வருவது குறித்தும், வாய்ப்பு கிடைத்தால் தமிழ்நாட்டுக்கு வருகை தருவேன் எனவும் விஜய்யிடம் தெரிவித்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.