

மெக்சிகோ,
மெக்சிகோவில் பல்வேறு நகரங்களில் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக ஜாலிஸ்கோ மாநிலத்தில் அமைந்துள்ள குவாடலஜாராவில் (Guadalajara), இதுவரை 1,245 பேருக்கு தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளில் 30 நாட்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே வாரத்தில் 2.5 லட்சம் மக்கள் தடுப்பூசி போட்டுள்ளநிலையில், மெக்சிகோ முழுவதும் நோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.