காட்டுத்தீ கொடூரம்: ஐரோப்பாவில் 1.40 லட்சம் மக்கள் வெளியேற்றம்

குரோஷியா, போர்ச்சுகல், செக் குடியரசு போன்ற அண்டை நாடுகள் தீயணைப்பு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அனுப்பி உதவி வருகின்றன.
காட்டுத்தீ
Published on

மாட்ரிட்,

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ அசுர வேகத்தில் பரவி வருவதால், இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் அருகே பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் இரவு பகலாகப் போராடி வருகின்றனர்.

அசுர வேகத்தில் பரவும் தீ

ஐரோப்பாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ மளமளவென பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான காடுகள் முற்றிலும் சாம்பலாகியுள்ளன. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் ராணுவ உதவியுடன் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 1,40,000-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. எனினும், காற்றின் திசை மாறுவதால் தீயைக் கட்டுப்படுத்துவதில் கடும் சவால் நீடித்து வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியம்

தற்போது நிலைமையைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசர உதவியைக் கோரியுள்ளன. அதனைத் தொடர்ந்து குரோஷியா, போர்ச்சுகல், செக் குடியரசு போன்ற அண்டை நாடுகள் தீயணைப்பு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அனுப்பி உதவி வருகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com