3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை ஏற்க தயார் - மியான்மர் அறிவிப்பு

மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில், ரோஹிங்கியா முஸ்லிம் இனக்குழுவினர் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை ஏற்க தயார் - மியான்மர் அறிவிப்பு
Published on

நைபிடா,

மியான்மரில் கடந்த 2017-ம் ஆண்டு ராணுவம் நடத்திய ஒடுக்குமுறை காரணமாக, லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் பக்கத்து நாடான வங்காளதேசத்திற்கு தப்பியோடி முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

மியான்மர் அரசு

இந்நிலையில், வங்காளதேசம் வழங்கிய பட்டியலின்படி முதற்கட்டமாக 3 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் மியான்மரின் ராகினே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

அங்கு நிலவும் பாதுகாப்பு சூழல் சீரடைந்தவுடன், இந்த 3 லட்சம் அகதிகளையும் மியான்மர் மீண்டும் தனது நாட்டிற்குள் அனுமதிக்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பயங்கரவாத பின்னணி கொண்ட சிலர் தவிர, மற்றவர்களை படிப்படியாக தாய் நாட்டிற்கு அழைத்து வர வங்காளதேசத்துடன் இணைந்து மியான்மர் அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com