நேபாளம்: மலையில் இருந்து உருண்ட பஸ்; 19 பேர் பலி

2024-ம் ஆண்டு இந்த ஆற்றில் 2 பஸ்கள் கவிழ்ந்தன. இதில், அவற்றில் பயணித்த 65 பேரின் நிலை என்னவென தெரியவில்லை.
நேபாளம்:  மலையில் இருந்து உருண்ட பஸ்; 19 பேர் பலி
Published on

காத்மண்டு

நேபாளத்தில் பொகாரா என்ற சுற்றுலா நகரில் இருந்து தலைநகர் காத்மண்டு நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் நள்ளிரவில் பிருத்வி நெடுஞ்சாலையை கடந்து இன்று காலை மலைப்பகுதியில் பயணித்து கொண்டிருந்தது.

அப்போது, திடீரென மலைச்சரிவில் உருள தொடங்கியது. அந்த பஸ் பெனிகாட் பகுதியருகே பாய்ந்து ஓடி கொண்டிருந்த திரிசூலி ஆற்றின் கரையோரத்தில் வந்து நின்றது. இந்த விபத்தில் சிக்கி பயணிகளில் 19 பேர் பலியானார்கள்.

Also Read
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பே வந்து விட்டது; ஒருதரப்பு வரிகளை கைவிடுங்கள்: அமெரிக்காவை வலியுறுத்திய சீனா
நேபாளம்:  மலையில் இருந்து உருண்ட பஸ்; 19 பேர் பலி

இது தவிர 25 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து, மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று பஸ்சுக்குள் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்டு, சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த ஆற்றில் 2024-ம் ஆண்டு 2 பஸ்கள் கவிழ்ந்தன. இதில், அவற்றில் பயணித்த 65 பேரின் நிலை என்னவென தெரியவில்லை. பலர் பலியாகியும் அல்லது காணாமல் போயும் உள்ளனர். ஒரே ஒரு பஸ் மட்டும் ஆற்று மணலில் சிக்கி உருக்குலைந்து கிடந்தது. அது நடப்பு ஆண்டில் கண்டறியப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com