

இதைத்தொடர்ந்து நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது தொடங்கி தற்போது வரை 782 பேருக்கு டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும் வைரஸ் பரவலின் மையமாக மாறியுள்ள ஆக்லாந்து நகரில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளன.
இந்தநிலையில் நியூசிலாந்தில் 6 மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக கொரோனா வைரசால் ஒருவர் உயிரிழந்தார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்லாந்து நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 90 வயதான மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நியூசிலாந்தில் கொரோனாவால் நிகழ்ந்த 27 உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.