வங்காளதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து: ஒருவர் பலி

5 ரெயில் பெட்டிகள் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் சிக்கி ஒருவர் பலியானார். பலர் படுகாயம் அடைந்தனர்.
வங்காளதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து: ஒருவர் பலி
Published on

டாக்கா,

வங்காளதேசத்தின் மைமென்சிங் நகர் ரெயில் நிலையத்தில் இருந்து தலைநகர் டாக்கா நோக்கி மோகங்கஞ்ச் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. அதிகாலை 4 மணி அளவில் காசிபூர் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த ரெயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 5 ரெயில் பெட்டிகள் தலைகுப்புற கவிழ்ந்தன. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விசாரணையில் விபத்திற்குள்ளான ரெயில் சென்ற தண்டவாளத்தை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியதால் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com