இந்த வருடம் மட்டும் இந்தியா 1077 முறை போர் விதி முறை மீறல் பாகிஸ்தான் குற்றச்சாட்டு

இது வரை இந்தியா 1077 போர் விதி முறைகளை மீறி உள்ளது. இந்தியாவுடன் போர் புரிய போவதில்லை என பாகிஸ்தான் ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது.
இந்த வருடம் மட்டும் இந்தியா 1077 முறை போர் விதி முறை மீறல் பாகிஸ்தான் குற்றச்சாட்டு
Published on

இஸ்லாமாபாத்

இந்தியாவுடன் எந்தவொரு போருக்கான முகாந்தரமும் இல்லை என்று பாகிஸ்தான் இராணுவம் இன்று கூறியது, ஆனால் சமாதானத்திற்கான அதன் போக்கை பலவீனமாக எடுத்துக்கொள்ள கூடாது என எச்சரித்து உள்ளது.

இராணுவ சேவை ஊடக பிரிவு, சர்வதேச சேவைகள் பொது உறவுகள் இயக்குனர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 1,077 போர் வீரர் மீறல்களை இந்தியா நடத்தி உள்ளது. எங்கள் பாதுகாப்பு, எங்கள் கனவு அமைதி நோக்கமாக கொண்டது. அதை எங்கள் பலவீனமாக கருதக்கூடாது.

இந்திய துப்பாக்கிச் சூடுக்கு பாகிஸ்தானில் எந்தவித பதில் தாக்குதலும் நடத்த வில்லை. பொதுமக்கள் இலக்காக இருந்தபோது மட்டுமே பதில் சொல்ல வேண்டும்.

இது 2003 ம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கையை கடைபிடிக்க இரு நாடுகளின் இராணுவத்தினரின் உடன்படிக்கைக்கு இணங்கியது. பாகிஸ்தான் இந்த உடன்படிக்கையை மதிக்க விரும்புகிறது. இதனை இந்தியர்கள் உணர வேண்டும்.

"நாங்கள் இரண்டு அணுசக்தி சக்திகளாக இருக்கிறோம், போருக்கு எந்த இடமும் இல்லை," இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com