உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது குறித்து முடிவு செய்ய குழு அமைத்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ தலைமையில் குழு ஒன்றை அமைத்து பாகிஸ்தான் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது குறித்து முடிவு செய்ய குழு அமைத்தது பாகிஸ்தான்
Published on

இஸ்லாமாபாத்,

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்தால், அந்த தொடரில் பங்கேற்க மாட்டோம் என இந்தியா கூறியிருந்தது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் 13-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பது குறித்து முடிவு செய்ய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ தலைமையில் குழு ஒன்றை அமைத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் பாகிஸ்தான் விளையாட்டுத்துறை மந்திரி அஹ்சான் மாசாரியும் இடம்பெற்றுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com