“நான் தெருவில் இறங்கி நடந்தால்...” எதிர்க்கட்சிகளுக்கு மிரட்டல் விடுத்த இம்ரான்கான்!

எதிர்க்கட்சிகள் அரசை கவிழ்க்க முற்பட்டால் கடும் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என்று இம்ரான்கான் பேசியுள்ளார்.
“நான் தெருவில் இறங்கி நடந்தால்...” எதிர்க்கட்சிகளுக்கு மிரட்டல் விடுத்த இம்ரான்கான்!
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதத்தில் அவர் தனது உரையில் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது:-

பணவீக்கம் பிரச்சினை தன்னை தூங்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் எதிர்க்கட்சிகள் அரசை கவிழ்க்க முற்பட்டால் கடும் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும்.

பாகிஸ்தானில் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.எரிபொருள் விலையேற்றம் கண்டுள்ளது. ஆனால் இது உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பால் இத்தகைய சவால்கள் எழுந்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com