

லாகூர்,
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து தெற்கே கராச்சியை நோக்கி இண்டர்சிட்டி ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த ரெயில் டிரைவர் எந்தவித அறிவிப்புமின்றி திட்டமிடப்படாத ஒரு இடத்தில் ரெயிலை நிறுத்தி விட்டு, தயிர் பாக்கெட் வாங்கி வந்துள்ளார். அவர் கானா ரெயில் நிலையம் அருகே ரெயிலை நிறுத்திவிட்டு தயிர் வாங்க சென்றுள்ளார். பின், அலட்சியமாக நடந்து வந்து மீண்டும் ரெயிலை இயக்கி உள்ளார்.
இந்த நிகழ்வை ரெயிலில் இருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவை பலர் பார்த்து வருகின்றனர். மேலும் பலரால் இது பகிரப்பட்டும் வருகிறது.
பாகிஸ்தானை சேர்ந்த ரெயில் ஓட்டுநரை பற்றிய அந்த வீடியோ தான், சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.