ரஷ்யாவில் கொரோனாவால் மேலும் 488 பேர் பலி: புதிதாக 28,080 பேருக்கு தொற்று உறுதி

ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 488 பேர் பலியாகினர். புதிதாக 28,080 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கொரோனாவால் மேலும் 488 பேர் பலி: புதிதாக 28,080 பேருக்கு தொற்று உறுதி
Published on

மாஸ்கோ,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 28,080 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 26,53,928 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 488 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 46 ஆயிரத்து 941 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 6,425 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 21,06,235 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5,00,752 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 2,300 பேர் தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com