கொலம்பியாவில் உள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே திடீர் மோதல் - 11 பேர் காயம்

கொலம்பியாவில் உள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் 11 பேர் காயமடைந்தனர்.
கொலம்பியாவில் உள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே திடீர் மோதல் - 11 பேர் காயம்
Published on


* பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரமான குவெட்டாவில் உள்ள போலீஸ் நிலையம் முன்பு, பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட மோட்டார் சைக்கிளை நிறுத்தி வெடிக்க செய்தனர். இதில் 2 போலீசார் உள்பட 5 பேர் பலியாகினர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

* கொலம்பியாவில் அட்லாண்டிகோ பகுதியில் அமைந்துள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. கூர்மையான ஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

* ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளர்கள் 44 பேரை கலவர வழக்கில் கைது செய்ததை கண்டித்து, ஹூவாய் சுங் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தை நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீஸ் நிலையம் மீது முட்டை உள்ளிட்டவற்றை வீசி எறிந்த போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

* அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரை சேர்ந்த ஜூவான் டிலியோன் (வயது 42) என்பவர் தனது முன்னாள் காதலியின் வீட்டுக்கு சென்று அவரையும், அவரது தாய் மற்றும் உறவினர் ஒருவரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்னர் அங்கிருந்து காரில் தப்பி சென்ற அவர், காருக்குள் இருந்தபடியே தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com