கனடா மந்திரியுடன் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஆலோசனை

பெரு நாட்டின் வெளியுறவு மந்திரி ஹியூகோ டி ஜெலாவையும் நேரில் சந்தித்து பேசினேன் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
கனடா மந்திரியுடன் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஆலோசனை
Published on

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் முக்கிய தாதுக்கள் தொடர்பான மந்திரிகள் மாநாட்டில் பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

இதுபற்றி குறிப்பிட்ட அவர், கனடா வெளியுறவு மந்திரி அனிதா ஆனந்துடன் நடந்த சந்திப்பின்போது, இரண்டு நாடுகளின் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி பேசினேன். அவருடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது என குறிப்பிட்டார்.

Also Read
கர்நாடகா: பெங்களூருவில் காற்று மாசால் சுவாச பாதிப்பு அதிகரிப்பு; அதிர்ச்சி தகவல்
கனடா மந்திரியுடன் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஆலோசனை

நம்முடைய நாடுகளின் உறவுகளை முன்னோக்கி எடுத்து செல்வது பற்றி இருவரும் பேசினோம் என்றும் கூறினார்.

இதேபோன்று, பெரு நாட்டின் வெளியுறவு மந்திரி ஹியூகோ டி ஜெலாவையும் நேரில் சந்தித்து பேசினேன். அப்போது, இரு நாடுகள் தொடர்பான நம்முடைய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக பேசினேன் என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com