

தாவேஸ்
உலக பொருளாதார மன்றத்தின் (WEF) வருடாந்தர கூட்டத்தின் 5 நாள் கூட்டத்தில் சர்வதேச உரிமை குழு ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கையை வெளியிட்டு கூறியதாவது:-
இந்தியாவில், தங்கள் வீடுகள் மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளும் பெண்களின் சம்பளம் இல்லாத வேலை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சதவீதம் 3.1 மதிப்பு ஆகும்.
உலகம் முழுவதும் பெண்கள் செய்யும் சம்பளம் இல்லாத வேலை (வீடு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு ரூ $ 10 டிரில்லியன் மதிப்பு ஆகும். இது உலகின் மிகப்பெரிய நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தை விட 43 மடங்கு ஆகும்.
பெண்கள் நகர்ப்புறங்களில் நாள் ஒன்றுக்கு 312 நிமிடங்களும், கிராமங்களில் நாள் ஒன்றுக்கு 291 நிமிடங்களும் வீட்டு வேலைகளில் செலவழிக்கிறார்கள்.
ஒப்பீட்டளவில், ஆண்கள் நகர்ப்புறத்தில் 29 நிமிடங்களும் கிராமப்புறங்களில் 32 நிமிடங்களும் வீட்டுவேலைக்காக செலவழித்து வருகிறார்கள் என ஆய்வில் கூறபட்டு உள்ளது.