முசாபர்நகர்,
ராஜா குரேஷி என்ற 18 வயது வாலிபர், டிக்-டாக் வீடியோ மோகத்தால், கால்வாயில் குதித்து பலியானார். உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் இந்த துயர நிகழ்வு நடந்துள்ளது.
டிக்-டாக் வீடியோ எடுப்பதற்காக அவர் குதுப்பூரில் உள்ள கால்வாயில் குதித்தார். ஆனால் அவர் எதிர்பாராதவிதமாக, அதன் தரைபாகம் கரடுமுரடாக இருந்ததால் குதித்த வேகத்தில் தலையில் அடிப்பட்டு பரிதாபமாக உயிர் இழந்தார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தகவல் அறிந்து போலீசார் அந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.