வடமாடு எருதுகட்டு விழா

வடமாடு எருதுகட்டு விழா
வடமாடு எருதுகட்டு விழா
Published on

மதுரை

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கோவில்பாப்பாகுடியில் சோனை கருப்பணசாமி கோவில் உற்சவ திருவிழா நடந்தது. இந்த விழாவையொட்டி சோனை கருப்பசாமிக்கு சிறப்பு பூஜை, ஆராதனை செய்யப்பட்டது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் முக்கிய நிகழ்வாக வடமாடு எருதுகட்டு திருவிழா நடத்தப்படும். நேற்று நடந்த வடமாடு எருதுகட்டு விழாவில் 13 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. ஒரு காளைக்கு 20 நிமிடங்கள் வீதம் 13 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக களம் இறங்கின. முதலில் கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அப்போது மாடுபிடி வீரர்கள் வேட்டி மற்றும் துண்டுகளை எடுத்து வீசியபடி ஆரவாரம் செய்தனர்..

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com