நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 47 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 189 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 49 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 30 ஆயிரத்து 520 பேர் பூரண குணமடைந்தனர். நேற்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார்.

இதனால் இறப்பு எண்ணிக்கை 187 ஆக அதிகரித்தது. தற்போது 482 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 351 ஆக்சிஜன் படுக்கைகளில் 146 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 205 படுக்கைகள் காலியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com