வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை

புதுவை கால்நடை மருத்துவக்கல்லூரியில் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை
Published on

புதுச்சேரி

புதுவை அரசுத்துறைகளில் பணியின்போது இறந்தவர்களுக்கு வாரிசு வேலை அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கும் நிகழ்ச்சி ,இன்று நடந்தது.

முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 2 பேருக்கு வாரிசு வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார். அப்போது வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com