மாதுளம் பழத்தைப் போன்றே மாதுளம் பூவிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. மாதுளையின் பழம், பூ, பட்டை, காய் ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது.
மாதுளம் பூவிலுல் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன.
மாதுளம் பூவை அப்படியே சாப்பிட்டால் ரத்த விருத்தி அடையும். ரத்த சோகை உள்ளவர்கள் இதனை சாப்பிடலாம்.
மாதுளம் பூக்களை உலர்த்திய பின்னர் பொடியாக்கி நாள் ஒன்றுக்கு ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டால் இருமல் பிரச்சினை குறையலாம்.
மாதுளம் பூவை பாலில் ஊறவைத்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குணமாகலாம்.
அருகம்புல் சாறுடன் மாதுளம் பூ சாறு சேர்த்து சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகளை சரி செய்யலாம்.
மாதுளம்பூவை நீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி, இதனுடன் சிறிது தேன், எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தொண்டைப்புண், வயிற்றுப்புண் உள்ளிட்டவை சரி ஆகலாம்.
மாதுளம் பூவை தலையில் வைத்துக்கொண்டால் தலைவலி தீரும் மற்றும் உடல் உஷ்ணம் குறையக்கூடும்.
இந்த தொகுப்பில் கூறப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.