குழந்தைகளுக்கு பிடித்த சேமியா கேசரி செய்யலாம் வாங்க...!

தேவையான பொருட்கள் : சேமியா - 500 கிராம், சர்க்கரை - 400 கிராம், தண்ணீர் - 400 மி.லி.,நெய் - தேவையான அளவு, முந்திரி பருப்பு - தேவையான அளவு, திராட்சை - தேவையான அளவு, ஏலக்காய் - 3 ,கேசரி பவுடர் - சிறிதளவு
செய்முறை : முதலில் முந்திரிப் பருப்பு, திராட்சையை நெய்யில் வறுத்து வைக்கவும்.
ஒரு கடாயில் சிறிது நெய் ஊற்றி சேமியாவை போட்டு வறுத்து கொள்ளவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சிறிது சிறிதாக சேமியா போட்டு கிளறி வேக விடவும்.
பின்னர் கட்டி விழாமல் இருக்க கை விடாமல் கிளற வேண்டும். சேமியா வெந்ததும் சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
பின் எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் போது கடைசியாக முந்திரி பருப்பு, திராட்சை, மீதியுள்ள நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.
பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் பறிமாறவும். சுவையான சேமியா கேசரி தயார்.
இதில் உங்களுக்கு பிடித்தமான நட்ஸ் எதை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.
Explore