தினமும் ஏ.பி.சி. ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
Photo: MetaAI
ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகிய 3 பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் ஏ.பி.சி. ஜூஸ் ஆரோக்கியமான பானமாகும். ஒவ்வொன்றும் தனித்துவமான நன்மைகளை வழங்குகின்றன. அவை ஒன்று சேர்ந்து சுவையான ஜூஸாக மாறுவதோடு உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கின்றன.
Photo: MetaAI
ஏ.பி.சி. ஜூஸ் இயற்கையாகவே சருமத்திற்கு அழகும், பளபளப்பும் சேர்க்கக்கூடியது. ஆப்பிள் மற்றும் கேரட்டில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளன. இவை கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கக்கூடியவை
Photo: MetaAI
சருமத்தில் விரைவாக சுருங்கங்கள் விழுவதை தடுக்கும். பீட்ரூட்டில் உள்ளடங்கி இருக்கும் பீட்டாலைன்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் சரும செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து தடுக்கும்.
Photo: MetaAI
தினமும் ஏ.பி.சி. ஜூஸ் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். இரும்பு மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை பீட்ரூட்டில் உள்ளன. இவை இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் ஆக்சிஜனின் சுழற்சியை ஊக்குவிக்கவும் பயன்படும்.
Photo: MetaAI
ஆப்பிள் மற்றும் கேரட்டில் நார்ச்சத்து, பெக்டின் உள்ளன. அவை அதிக பித்த உற்பத்தி மற்றும் எளிதான செரிமானம் மூலம் வளர்சிதை மாற்றக்கழிவுகள் மற்றும் நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றும் செயல்முறையை துரிதப்படுத்துகின்றன.
Photo: MetaAI
ஏ.பி.சி ஜூஸ் குறைந்த கலோரிகளை கொண்டிருப்பதாலும், ஊட்டச்சத்து, நார்ச்சத்து அதிகமாக இருப்பதாலும் உடல் எடையை குறைக்க அல்லது சீராக நிர்வகிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற தேர்வாக அமையும்.
Photo: MetaAI
ஏ.பி.சி. ஜூஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அது குடல் நோய்களை தடுக்கும். மலச்சிக்கல், வயிறு வீக்கம் போன்ற பொதுவான செரிமான பிரச் சினைகளையும் விரட்டியடிக்கும்.
Photo: MetaAI
பீட்ரூட் இரைப்பை அமிலங்களின் சுரப்பை ஊக்குவிப்பதால் செரிமானத்தை எளிதாக்கும். ஏ.பி.சி. ஜூஸை தொடர்ந்து உட்கொள்வது ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியம், ஊட்டச்சத்து ஒருங்கிணைப்பு மற்றும் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை மேம்படுத்தும்.