பத்தே நிமிடத்தில் செய்யலாம் மீன் பக்கோடா..!

all photo using metaAI
குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மீன் பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : முள் நீக்கிய மீன் துண்டுகள், முட்டை, சோளமாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை: மீன் துண்டுகளை நன்றாக கழுவி இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ளவும். பின்னர் அவைகளை உதிர்த்துக்கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் முட்டையை அடித்து ஊற்றி நன்றாக கலக்கி அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோள மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
அதனுடன் மீன் துண்டுகளை கொட்டி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் இந்த மீன் கலவையை கொதிக்கும் எண்ணெய்யில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்தெடுக்கவும்.
சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கு பிடித்த ருசியான மீன் பக்கோடா தயார்.
Explore