X@narendramodi
X@narendramodi

ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலின் சிறப்புகள் என்னென்ன...?

Published on
முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ஐ.என்.எஸ். விக்ராந்த். 2022-ஆம் ஆண்டு இயக்கப்பட்ட இது, சொந்தமாக விமானம் தாங்கிக் கப்பல்களை வடிவமைத்து கட்டமைக்கும் திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இணைத்தது.
X@narendramodi
'விக்ராந்த்' என்ற பெயருக்கு 'தைரியமான' அல்லது 'வெற்றியாளர்' என்று பொருள்.
X@narendramodi
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட இது, இந்தியாவின் வளர்ந்து வரும் கடற்படை மற்றும் தொழில்துறை வலிமையை பிரதிபலிக்கிறது.
X@narendramodi
262 மீட்டர் நீளமும் 62 மீட்டர் அகலமும் கொண்டது. தோராயமாக இரண்டு கால்பந்து மைதானங்களின் அளவு மற்றும் 18 தளங்கள் உயரம் கொண்டது.
X@narendramodi
இது கிட்டத்தட்ட 1,600 பேர் கொண்ட குழுவினரையும், 16 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையையும் கொண்டுள்ளது. மேலும் 250 டேங்கர் எரிபொருள் கொண்டு செல்கிறது.
X@narendramodi
இது மிக்-29கே போர் விமானங்கள் மற்றும் பல்வேறு ஹெலிகாப்டர்கள் உட்பட 30 விமானங்கள் வரை தாங்கும் சக்தி கொண்டது.
X@narendramodi
பல வருட சோதனைகள் மற்றும் அனுமதிகளுக்குப் பிறகு, ஐ.என்.எஸ். விக்ராந்த் கடந்த ஆண்டு முழு செயல்பாட்டு அந்தஸ்தைப் பெற்றது. இப்போது மேற்கு கடற்படை கட்டளையின் கீழ், இது இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் சிக்கலான கடற்படைப் பணிகளைக் கையாளத் தயாராக உள்ள ஒரு முழுமையான திறன் கொண்ட போர்க்கப்பலாக திகழ்ந்து வருகிறது.
X@narendramodi

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com