இதன் சுவையே தனி தான்.. செட்டிநாடு ஸ்பெஷல் `கும்மாயம்'..!
கும்மாயம் என்பதற்கு குழைய சமைத்த பருப்பி என்று பொருள். உளுந்து, பாசிப் பருப்பு, நெய், பனங்கருப்பட்டி, ஆகியவை சேர்த்து வேகவைத்து செய்யப்படும் இனிப்பு பலகாரம் ஆகும்.
தேவையான பொருட்கள்: உளுந்து, பச்சரிசி, பாசிப்பருப்பு, நெய், வெல்லம் அல்லது கருப்பட்டி ஆகியவை.
செய்முறை: முதலில் பாசிப்பருப்பு, உளுந்து, பச்சரிசி ஆகியவற்றை தனித்தனியாக கடாயில் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
வறுத்து வைத்துள்ள ஒவ்வொன்றையும் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக பொடித்து சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். கொதித்தவுடன் அதனை வடிகட்டி பாகு காய்ச்ச வேண்டும்.
நெய்யில் வறுத்து வைத்துள்ள மாவை தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கடைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கரைத்து வைத்திருக்கும் மாவை கொதிக்கும் வெல்லப்பாகில் சேர்க்க வேண்டும்.
கிண்டும் போது கட்டியாகாமல் இருக்க இடை இடையே நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாவு நன்றாக வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்க வேண்டும்.
சுவையான கும்மாயம் ரெடி. வாயில் வைத்தவுடன் கரைந்து ஓடிவிடும். இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் புடிக்கும்.